Thursday, May 24, 2012

கவுண்டமணி செந்திலும் மூணு படமும்

courtesy: gokul manathil  This post i loved so much.....i share it..



நம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிருக்க செந்தில் வருகிறார்.,

செந்தில்- வாங்கண்ணே!எங்கண்ணே ரொம்ப நாளா காணோம் எங்கண்ணே போனீங்க?

கவுண்டர்- அது வந்துடா சப்போட்டா தலையா ஜனாதிபதி தேர்தல் வரப்போகுதில்ல அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ண டெல்லி போயிருந்தேன்,விசயத்த சொல்லுடா வெளக்கெண்ண .,

செந்தில்-டெல்லிக்கு போனிங்களே நாட்டு நடப்பெல்லாம் எப்புடிண்ணே  இருக்கு?


கவுண்டர்-ஏண்டா போண்டா வாயா டெல்லி மட்டும் தான் நாடா?ஏன் நாம இருக்கற தமிழ்நாடு எல்லாம் நாடு இல்லையா?டெல்லிக்கு போனாதான் நாட்டு நடப்பு தெரியுமா? டீக்கடைல உக்காந்து தினத்தந்தி படிச்சாலே நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கலாம்டா.,என்னைக்குத்தான் திருந்தப்போறிங்களோ so sad.,so sad.

செந்தில் – என்னண்ணே சோ சோகமா இருக்காரா?எதுக்குண்ணே?

கவுண்டர் – அடங்கோ,டே,ஆன்ட்ராய்டு மண்டையா இதுக்குத்தான் நான் இங்கிலீஷ் பேசுறது இல்ல.

செந்தில் – சரி விடுங்கண்ணே,பத்தாவது பெயில் ஆனா இப்படித்தான் பேசத்தோணும், ஏதாவது படம் பாத்தீங்கலான்னே,

கவுண்டர் – ஆமாடா மைக்ரோமாக்ஸ் வாயா,இப்பல்லாம் எவனும் பாக்குற மாதிரி படம் எடுக்குறதில்ல,படம் பாத்தாலே நமக்கு டங்ஷன் ஆகிடுது,அதுக்காகவே படமே பாக்குறதில்லனு முடிவு பண்ணியிருந்தேன்,சரி போனா போகுதுன்னு நேத்துதான் மூணு படம் பாத்தேன்.

செந்தில் – பெரிய ஆள்ணே நீங்க.,ரொம்ப நாளா படம் பாக்காம இருந்துட்டு ஒரே நாள்ல மூணு படம் பாத்துட்டீங்க,


கவுண்டர் – அடங்கொன்னியா!அடே,அர ட்ரவுசர் பையா,மூணு படம் பாக்கலடா,ஒரு படம் பாத்ததுக்கே டர்ஸ்சாகிட்டேன்,இன்னும் மூணு படம் பாத்தா வடக்குப்பட்டி ராமசாமிக்கிட்ட குடுத்த பணம் மாதிரி ஊஊ ஊ ஊ.....தான்.

செந்தில் – சரிண்ணே மூணு படத்துலயும் யாரு ஹீரோ,யாரு ஹீரோயின்.

கவுண்டர் – அது வந்துடா ,நம்ம சூப்பர் ஸ்டாரோட மருமகப்பிள்ளை ஹீரோ,நம்ம உலக நாயகனோட புதல்விதான் ஈரோயினி,டைரக்டர் யாருன்னு கேட்டே அசந்தே போயிடுவடா தர்பூஸ் தலையா,நம்ம சூப்பர்ஸ்டாரோட மருமகனோட ஓய்பு தான் இந்த படத்தோட டைரக்டரு.


செந்தில் – அதெல்லாம் சரிண்ணே,மத்த ரெண்டு படத்தோட ஈரோ,ஈரோயின் யாருண்ணே?டைரக்டர் யாரு அவங்க வெவரம் பத்தி சொல்லுங்கண்ணே,

கவுண்டர் – என்னடா கேட்டே?

செந்தில் – வெவரம்,வெவரம்.

கவுண்டர் – டேய்,ஐ பாட் மூக்கா, இன்னிக்கு என்கிட்டே செம மாத்து வாங்காம போக மாட்ட போலிருக்கு,அதுக்குள்ளே ஓடிப்போயிடு.டே,சத்தியமா நான் பாத்தது ஓரே ஒரு படம்தாண்டா.

செந்தில் – அட போங்கண்ணே – இப்படித்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னால ரெண்டு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு என்னை ஏமாத்துணனிங்க,இப்போ மூணு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு எமாத்துறீங்க,போங்கண்ணே


கவுண்டர்- -ஆமா இவரு பெரிய கன்னிப்பொண்ணு,காதலிச்சுட்டு,கர்ப்பமாக்கிட்டு ஏமாத்துறாங்க,போடா டேய்.

செந்தில் – அந்த ரெண்டு படத்துலயும் ஒரு படத்துல மாதவன்- அனுஷ்கா,இன்னொரு படத்துல மாதவன் – ரீமா சென் நடிச்சாங்கன்னு சொன்னீங்க,இந்த மூணு படத்துல யாறாருனு சொல்லுங்கண்ணே,இல்லேன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடும்ணே.


கவுண்டர் – அடேய்,உன்மண்டைய நானே ஓடச்சுடுவேன்,டே சத்தியமா நான் பாத்தது ஒரே ஒரு படம் தாண்டா.


செந்தில் – அட போங்கண்ணே,நான் அந்த பழம்தான் இந்த பழம்னு சொன்னப்போ உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சு,எப்படி டென்சன் ஆனீங்க,இப்போ நீங்க அந்தப்படம் தான் இந்தப்படம்னு சொல்றீங்க.


கவுண்டர் – டேய் முலாம்பழ கண்ணா,எதுக்கும் எதுக்கும்டா கனெக்சன் குடுக்குற,ரொம்பநாளாச்சே பாவம் விட்டுடலாம்னு பாத்தா விட மாட்ட போலிருக்கு.இனிமே பேசிப்பிரயோஜனம் இல்ல ஸ்டார்ட் மியூசிக்.....









No comments:

Post a Comment